News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

"கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும்" – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Web Team by Web Team
April 27, 2021
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
"கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும்" – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Share on FacebookShare on Twitter

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்தநிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக கோவாக்சின் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 600 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தடுப்பூசி விலை உயர்வை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

3 ஆம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு செலுத்தவேண்டிய தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையும், தற்போதைய விலையும் மாறுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் விலையை சில மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கட்டான சூழ்நிலையில் இந்த விலை உயர்வு மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். 

தடுப்பூசி திட்டத்திற்காக 2021-22 நிதியாண்டில் 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: #COVID19Central GovernmentCorona VaccinenewjTNGovernment
Previous Post

சனிக்கிழமைகளிலும் மீன் கடைகள், இறைச்சிக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு!

Next Post

வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தையார் மறைவு

Related Posts

24000 கோடி போதைப் பொருள் நேற்று அழிப்பு! இங்க இல்ல டெல்லி-ல!
இந்தியா

24000 கோடி போதைப் பொருள் நேற்று அழிப்பு! இங்க இல்ல டெல்லி-ல!

July 18, 2023
9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!
இந்தியா

9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

February 6, 2023
புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது – குடியரசுத் தலைவர் !
இந்தியா

புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது – குடியரசுத் தலைவர் !

January 31, 2023
சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!
உலகம்

சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!

January 26, 2023
ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு பரிந்துரை
Top10

ஸ்புட்னிக் லைட் ஒன்-ஷாட் கொரோனா தடுப்பூசிக்கு பரிந்துரை

February 5, 2022
கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடம்
Top10

கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடம்

February 5, 2022
Next Post
வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தையார் மறைவு

வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தையார் மறைவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version