மது அருந்திய மாணவரை தட்டிக் கேட்டவருக்கு கத்தியால் வெட்டு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வீட்டின் அருகில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், அரசு பேருந்து ஓட்டுநரின் மனைவி மற்றும் மகளை கத்தியால் வெட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குடையான் பட்டியைச் சேர்ந்தவர் முனிப்பாண்டி. இவர் அரசு பேருந்து ஓட்டுனராகப் பணிபுரிகிறார். அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மதன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து, முனிப்பாண்டி வீட்டின் அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். இதை முனிப்பாண்டி கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் மதன், முனிப்பாண்டியை கத்தியால் தாக்க முயன்றார். அப்போது முனிப்பாண்டியின் மனைவி கலா, அவரது மகள் ஆனந்த சுவேதா ஆகியோர் மதனைத் தடுக்க முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த மதன், அவர்களை கத்தியால் வெட்டினார்.

இந்த சம்பவத்தில் படுகாயடைந்த கலா, ஆனந்த சுவேதா சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த உசிலம்பட்டி காவல்துறையினர் கல்லூரி மாணவர் மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version