போதையில் பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞர்களுக்கு தர்மஅடி

மது போதையில், அரசு பேருந்து நடந்துனரை தாக்கிய இரண்டு இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

ஈரோட்டில் இருந்து திருப்பூர் வந்த அரசு பேருந்து ஒன்று, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்குள் செல்ல முற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் இருவர், பேருந்து செல்ல வழி விடாமல் சாலையில் நின்றுள்ளனர். இதற்கு பேருந்து நடத்துனர், அவர்களை விலகி செல்லுமாறு கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், பேருந்து நடத்துனரை தாக்கியுள்ளனர். காயமடைந்த நடத்துனர் ராமசாமி, அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். நடத்துனர் தாக்கப்படுவதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் போதை இளைஞர்களை சரமாரியாக தாக்கினர்.

Exit mobile version