இரட்டை மாட்டு வண்டி பந்தயம் விமரிசை !

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். செவல்பட்டி கிராமத்தில் கருப்பணசாமி கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 40 மாட்டுவண்டி பந்தய வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றி இலக்கை நோக்கி காளைகள் சீறிப் பாய்ந்து ஓடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Exit mobile version