கட்சி கொள்கைகளை மறந்து ஆயுத பூஜை கொண்டாடிய திமுக சட்டமன்ற உறுப்பினர்

கட்சியின் கொள்கை மற்றும் பழக்க வழக்கங்களை மறந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆயுதபூஜை கொண்டாடி உள்ளார்.

திமுகவை பொறுத்தவரை இந்து பண்டிகைகளில் சில பண்டிகைகளை கொண்டாட கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கின்றனர். அதில் ஆயுத பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

அதே நேரம் பொங்கல், யுகாதி, ஓணம் போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து சொல்வதை திமுக தலைவராக இருந்த கருணாநிதி வழக்கமாக கொண்டிருந்தார்.

எனினும் வாக்கு கிடைக்கிறது என்றால், எதனையும் செய்ய திமுகவினர் தயாராக இருப்பார்கள். அந்த வகையில், திமுக சட்டமன்ற உறுப்பினரும், மு.க.ஸ்டாலினின் நெருங்கிய தோழரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கட்சி கொள்கைகளை மறந்து ஆயுதபூஜை கொண்டாடி உள்ளார்.

அவர் ஆயுதபூஜை கொண்டாடிய புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, கிண்டலுக்கு இலக்காகி உள்ளது.

Exit mobile version