தண்ணீர் விவகாரத்தில் போராட்டம் நடத்த திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை: ஜெயக்குமார்

தண்ணீர் வினியோகத்தை தடுக்கும் திமுவினருக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தண்ணீர் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என குறிப்பிட்டார்.

கவியரசு கண்ணதாசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குடும்பத்தினர், கவிஞர் கண்ணதாசன் மறைவுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு மரியாதை செலுத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version