சயன், மனோஜ்க்கு ஜாமின் கையெழுத்து – திமுகவின் சதித்திட்டம் அம்பலம்

சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமின் கிடைக்க திமுக பிரமுகர்கள் உறுதியளித்திருப்பது தெரியவந்ததுள்ளதால், கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் திமுகவின் திட்டமிட்ட சதி இருப்பது அம்பலமாகி உள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சயனை ஜாமினில் வெளியில் கொண்டு வர திமுக முன்னாள் மேயர் மா.சுப்ரமணியத்தின் தனிப்பட்ட புகைப்பட கலைஞர் சுந்தரராஜன், 170-ஏ திமுக வட்ட செயலாளர் மோகன் குமார் ஆகியோர் ஜாமின் பத்திரத்தில் கையெழுத்திட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதேபோல் மற்றொரு நபரான மனோஜின் ஜாமின் பத்திரத்திலும் 170வது திமுக வட்ட இளைஞர் அணி செயலாளர் கதிர்வேலு கையெழுத்திட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஆதரவாக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் பிரபாகரன், திருமாறன், அக்பர் பாஷா, புருஷோத்தம்மன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். இதன்மூலம் கொடநாடு விவகாரத்தில் திமுகவின் பின்புலமும், திட்டமிட்ட சதியும் அடங்கி இருப்பது அம்பலமாகி உள்ளது.

Exit mobile version