திமுக 20 மாத ஆட்சிகாலத்தில் எந்த திட்டங்களும் செய்யவில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே புரட்சித்தலைவர் எம்ஜிஆரின்106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், நகர கழக செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, இலங்கை தமிழர்களுக்கு உண்மையான பாதுகாவலனாக இருந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என தெரிவித்த அவர், திமுகவின் 20 மாத ஆட்சிகாலத்தில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டங்களையாவது செய்திருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version