சிறுபான்மையின மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திருப்பதாக திமுக கூறுவது பொய்: ராமதாஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிலரின் பேச்சைக் கேட்டு தவறு செய்ய வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராமதாஸ், திமுகவினர் சிறுபான்மை இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருப்பதாக கூறுகிறார்கள், இதனை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், இந்த இடஒதுக்கீடு பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி பெற்று தந்தது என்றார். சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும், அதனை அரசு ஊழியர்கள் நம்பி தவறு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

Exit mobile version