17 ஆண்டுகள் தமிழகத்துக்கு துரோகம்செய்தது தி.மு.க.தான் – அமைச்சர் ஜெயக்குமார் சாடல்

மத்தியில் 17 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது தமிழகத்துக்குத் துரோகம்செய்தது தி.மு.க.தான் -என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரப்போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியின் 103-வது பிறந்தநாள் விழா, இன்று பல இடங்களில் கொண்டாடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அன்பழகன் உள்பட பல அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ” மத்தியில் 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றியிருக்கலாம். அதைச் செய்யாமல் அந்தக் கட்சி தமிழகத்திற்கு 17 ஆண்டுகள் துரோகம் இழைத்துவிட்டது.” என்று குற்றம்சாட்டினார். 

Exit mobile version