திமுக கூட்டணி கடவுளை நிந்திக்கும் கூட்டணி: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணி கடவுளை நிந்திக்கும் கூட்டணி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

விருதுநகர் மக்களவை தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என்று கூறினார்.

மேலும், கடவுளை நம்புகின்ற அனைவரும் அதிமுக கூட்டணியில் உள்ளனர் என்றும், திமுக கூட்டணியில் உள்ளவர்கள் கடவுளை நிந்திப்பவர்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

Exit mobile version