ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் காலியாக கிடந்த இருக்கைகள் – நிர்வாகிகள் அதிர்ச்சி

சிதம்பரத்தில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தினர் கலைந்து சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரம் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று திருமாளவளவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ஆனால் அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கலையத் தொடங்கியதால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன.

இறுதியாக ஸ்டாலின் பேச்சை முடிக்கும் போது பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாகின. இதனால் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Exit mobile version