அரசுப்பள்ளி மாணவர்களுடன் செஸ் விளையாடிய மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் அருகே காவனூரில் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் செஸ் விளையாடி ஊக்கப்படுத்தினார்.

காவனூரில் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அப்போது, அங்கிருந்த விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் விளையாட்டு பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருடன் செஸ் விளையாடி, அவர்களை ஊக்கப்படுத்தினார். கல்வியுடன் விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டுமென்று மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Exit mobile version