தனியார் பள்ளிகளின் பேருந்துகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூரில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

வேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில், தீயணைப்புத் துறையினர், போக்குவரத்து துறையினர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டு 159 பள்ளிகளை சேர்ந்த 720 பேருந்துகளை சோதனை செய்தனர்.

இதில் மாணவர்களின் பாதுகாப்பான வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா எனவும், வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஒருசில பேருந்துகளில் இருந்த காலாவதியான தீயணைப்பு கருவிகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

Exit mobile version