ஆந்திர முன்னாள் எம்.பி சீனிவாச ரெட்டியின் சென்னையில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆந்திர முன்னாள் எம்.பி சீனிவாச ரெட்டியின் சென்னையில் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாப்பூரில் உள்ள விடுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வருமான வரி சோதனையில் 7 கிலோ தங்கம், 11 கோடி ஹவாலா பணம் சிக்கியது.

இதில் தொடர்புடைய தொழிலதிபரை கைது செய்து விசாரித்ததில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் தொழிலதிபர் ராகுல் ரெட்டி மற்றும் முன்னாள் ஆந்திர எம்.பி. சீனிவாச ரெட்டி ஆகியோருக்கு சொந்தமான என்ரிகா நிறுவன அலுவலகம், பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலை, தியாகராய நகர் பாலாஜி குரூப் ஆப் கம்பெனி, உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் 3 நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இச்சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version