ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்காண விருப்பமனு விநியோகம்!

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வரும் 26ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். விண்ணப்ப கட்டணமாக15 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை பெற்று, அனைத்து விபரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version