ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை- என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்தை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மற்றும் அவரது தந்தைக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, புதுச்சேரி சி.பி.ஐ. நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

அசோக்கின் தந்தை ஆனந்தன் பொதுப் பணித்துறையில் பணியாற்றியபோது, முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்து, புதுச்சேரி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version