குமாரசாமி, சிவகுமாரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்: அதிருப்தி எம்.எல்.ஏக்கள் புகார்

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அமைச்சர் சிவகுமார் ஆகியோரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மும்பை ஆணையரிடம் கர்நாடகாவை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் புகார் அளித்துள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் வழங்கியதோடு, தனி விமானம் மூலம் மும்பை சென்று அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியாக அவர்களை சந்திக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மற்றும் அமைச்சர் சிவகுமார் ஆகியோர் புதனன்று மும்பை செல்லவுள்ளனர்.

இந்நிலையில், நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் மும்பை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், குமாரசாமி மற்றும் சிவகுமாரால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதுவதாகவும் எனவே அவர்களை நட்சத்திர விடுதிக்குள் அனுமதிக்க கூடாது என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version