ஈரோட்டில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மையம்

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மைய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்ற தமிழக அரசு 1 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, நகரும் எக்ஸ்ரே இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

Exit mobile version