புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் – தினேஷ் குமார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் என மத்திய அரசின் இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சமீபத்தில் பார்வையிட்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மத்திய அரசின் இணை செயலாளர் தினேஷ் குமார் தலைமையிலான மத்தியக்குழு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். இதனடிப்படையில், நாகை மாவட்டத்திற்கு வந்த தினேஷ் குமார் தலைமையிலான மத்தியக்குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குமார், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்புக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க அறிக்கை மூலம் பரிந்துரை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version