முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகின. பாஜக – சிவசேனாவுடன் கூட்டணி அறுதிப் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்ற போதும், முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் இரு கட்சிகளிடமும் பிடிவாதம் நீடிப்பதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதால் ஆளுநர் பகத்சிங் கோசியாரியைச் சந்தித்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவி விலகல் கடிதத்தை அவரிடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது பதவி விலகலை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.

Exit mobile version