’தூங்காதே தம்பி தூங்காதே’ – அரசு நிகழ்ச்சி என்றும் பாராமல் மேடையில் தூங்கி வழிந்த திமுக துணை சபாநாயகர்!

ஸ்டிக்கர் அடித்து விளம்பரத்தை தேடும் விடியா திமுக அரசு, நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மேடையில் துணை சபாநாயகர் தூங்கி வழிந்த சம்பவம் அங்கு கூடியிருந்த பயனாளிகளிடையே சிரிப்பை வரவழைத்தது.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் 800 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக கூறி பல மணி நேரம் பயனாளிகளை காக்க வைத்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளில் அரசு முத்திரை மட்டுமே இருக்கும் என தெரிவித்து விட்டு விடியா அரசின் முதலவ்வர் ஸ்டாலின் படம் போட்ட நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

இதனிடையே, விழா மேடையில் துணை சபாநாயகர் பிச்சாண்டி தூங்கி வழிந்த சம்பவம் அங்கு அமர்ந்திருந்த பயனாளிகளை முகம் சுளிக்க வைத்தது.

Exit mobile version