மதுசூதனன் இல்லத்திற்கு சென்று துணை முதல்வர் நலம் விசாரிப்பு

உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பிய அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்து வீட்டில் உள்ளார். இந்நிலையில், தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு, மாலை 5 மணியளவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் மற்றும் மதுசூதனன் குடும்பத்தினர் வரவேற்றனர்.

Exit mobile version