News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

அழிவு நிலையில் இருக்கும் அமேசான் காடுகளை பாதுகாக்க உலக நாடுகள் தீவிரம்

Web Team by Web Team
August 3, 2019
in TopNews, உலகம், செய்திகள்
Reading Time: 1 min read
0
அழிவு நிலையில் இருக்கும் அமேசான் காடுகளை பாதுகாக்க உலக நாடுகள் தீவிரம்
Share on FacebookShare on Twitter

அறிய வகை உயிரினங்களையும், அபூர்வ தாவரங்களையும் உள்ளடக்கியது, பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள். அவை தற்போது அழியும் நிலையில் இருந்து வருகிறது.

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளின் பங்களிப்பு என்பது உலகிற்கு மிக முக்கியமானது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சுமார் இருபது சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறது. அது மட்டும் அல்லாது, உலகில் இருக்கும் முக்கியமான பத்து சதவீத தாவரங்களும் உயிரினங்களும் இங்கு தான் உள்ளன.

அமேசான் நதிப் படுகையானது, பல நாடுகளில் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் விரிந்து கிடக்கிறது. நாம் கேள்விப்படாத ஏராளமான உயிரினங்களுக்கு இப்பரப்பு தஞ்சம் கொடுத்திருக்கிறது. பருவமழைகளை வரைமுறைப்படுத்துவதில் இந்தக் காடுகள் மிக முக்கியக் காரணியாக இருக்கின்றன. இந்த மழைக்காடுகளில், 400 வகையான பூர்வகுடிகளும் வாழ்கின்றனர். லாப நோக்கத்துக்காக அந்தக் காடுகள் அழிக்கப்படுவதை அவர்கள்தான் இதுவரை தடுத்துக்கொண்டிருந்தார்கள். இதனால், அமேசான் காட்டின் பெரும்பகுதியானது தப்பிப் பிழைத்திருக்கிறது.

பிரேசில் அதிபராக ஜனவரியில் ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு, அமேசான் காடு அழிக்கப்படுவது தீவிரமாகியிருக்கிறது. ஜுலை 24 வரையிலான கணக்கின்படி, 4 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் அளவு காடுகள் அழிக்கப்பட்டதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.

அமேசான் காடுகளில் 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பை பிரேசில் கொண்டிருக்கிறது. இந்தக் காடுகள் இருக்கும் பரப்பில் சில பகுதியை வேண்டுமானால் தனியாருக்கு விற்கலாம் என்ற ரீதியில், போல்சோனரோ பேசியிருக்கிறார். வனச்சட்ட விதிமுறைகள் மாற்றப்படவில்லை என்றாலும், அவருடைய பேச்சு சட்டத்துக்குப் புறம்பாகக் காடுகளைப் பயன்படுத்துவோருக்குத் துணிவைக் கூட்டியிருக்கிறது. ஆயுதம் ஏந்திய வேட்டைக் கும்பல்கள் சமீபத்தில் பழங்குடியினர் பிரதேசங்களில் ஊடுருவின. அப்படிப்பட்ட ஊடுருவலில் அமாபா என்ற இடத்தில் ஒரு பழங்குடித் தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார். செயற்கைக்கோள் தரவுகளையும், வன்முறை பற்றிய செய்திகளையும் பிரேசில் அதிபர் மறுத்திருப்பது கொஞ்சமும் ஏற்புடையதாக இல்லை.

இந்த நிலையில், பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு ஒன்றை உலக நாடுகள் ஒன்றிணைந்து பிரேசிலில் நடத்துவதாக இருந்தது. ஆனால் இயற்கை வளங்களை அழிக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு துணை போகும் பிரேசில் அதிபர் இந்த மாநாட்டை பிரேசிலில் நடத்த மறுப்பு தெரிவித்திருக்கிறார். இவ்வாறு மறுத்திருப்பதன் மூலம், காடுகளை பாதுகாப்பதற்கு கிடைத்திருக்கக்கூடிய பெரிய அளவிலான நிதியுதவிகளை பிரேசில் இழந்திருக்கிறது. எனினும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து நல்லவேளையாக பிரேசில் வெளியேறவில்லை. அப்படிச் செய்திருந்தால், பிரேசிலுக்குரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும்.

உலகின் நுரையீரலாக விளங்கும் அமேஸான் காடுகளை காப்பதற்கு, தற்போது உலக அளவில் பெரும் உத்வேகம் ஒன்று காணப்படுகிறது. மழைக்காடுகள் எல்லாம் அகில உலகத்துக்கும் பொதுவான பொக்கிஷங்கள் என்பதையும், பழங்குடியினருக்கும், அவர்களுடைய நிலத்துக்கும் இடையிலான உரிமை பிரிக்க முடியாதது என்பதையும், பிரேசில் அதிபர் உணர வேண்டும். காலநிலை மாற்றம் மனித குலத்திற்கு சவாலாக உள்ள இந்த தருணத்தில், காடுகளை வளர்த்தால்தான் புவி வெப்பமயமாவதை தடுக்கமுடியும் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

Tags: அமேசான் காடுகள்உலக நாடுகள்பிரேசில்
Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பால், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விலை குறைப்பு

Next Post

முதல்வர் உத்தரவின் பேரில் வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கம்

Related Posts

தெற்கு பிரேசிலில் உலகின் மூன்றாவது பெரிய சிலை :
TopNews

தெற்கு பிரேசிலில் உலகின் மூன்றாவது பெரிய சிலை :

April 14, 2021
தாமதமாகும் மழைப்பொழிவு; அமேசானில் காட்டுத் தீ அணைவதற்கு வாய்ப்புகள் குறைவு
TopNews

தாமதமாகும் மழைப்பொழிவு; அமேசானில் காட்டுத் தீ அணைவதற்கு வாய்ப்புகள் குறைவு

August 28, 2019
பிரேசிலில் ஆரம்ப பள்ளிக்குள் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
உலகம்

பிரேசிலில் ஆரம்ப பள்ளிக்குள் நுழைந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

March 14, 2019
செயற்கைகோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவை பின்பற்றும் உலக நாடுகள்
TopNews

செயற்கைகோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவை பின்பற்றும் உலக நாடுகள்

January 27, 2019
பிரேசில் அருங்காட்சியகத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு
TopNews

பிரேசில் அருங்காட்சியகத்தில் கண்ணீர் புகை குண்டு வீச்சு

September 4, 2018
Next Post
முதல்வர் உத்தரவின் பேரில் வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கம்

முதல்வர் உத்தரவின் பேரில் வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version