News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

கோயில் நிலத்தை பத்திரம் தயாரித்து பிளாட்டாக விற்பனை !

Web team by Web team
February 4, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கோயில் நிலத்தை பத்திரம் தயாரித்து பிளாட்டாக விற்பனை !
Share on FacebookShare on Twitter

புதுச்சேரி பாரதி வீதி அருகே அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கு அன்னை நகர் பகுதியில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 64 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது. அதில் ஆறரை கோடி ரூபாய் மதிப்பிலான 30 ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள காலி நிலத்தை கும்பல் ஒன்று போலி பத்திரம் தயாரித்து பிளாட்டாக விற்பனை செய்துள்ளதாக, கோயில் நிர்வாக செயலாளர் சுப்ரமணி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி மோகன் குமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணயின்போது, கோயில் நிலம் அருகே பல ஏக்கர் நிலம் வைத்திருந்த ரத்தினவேல், இந்த நில அபகரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட ரத்தினவேல் திருவான்மியூரில் வசித்து வருகிறார். அவர் கோயில் நிலத்தை தனது நிலத்துடன் சேர்த்து போலி பத்திரம் தயாரித்து தனது மனைவி மோகனசுந்தரி பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். மனோகர், இதற்கு பட்டா சிட்டா மாற்றம் செய்து, அப்போதிருந்த கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமி உதவியோடு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்துள்ளார்.

சிபிசிஐடி போலீசார் விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்த நிலையில், போலி பத்திரம் தயாரித்து நில மோசடி அபகரிப்பில் ஈடுபட்ட ரத்தினவேல் – மோகனசுந்தரி தம்பதி, மனோகர் ஆகியோர் தலைமறைவாகி உள்ளனர். இந்த நிலையில் அவர்களது செல்போன் எண்களை வைத்து சென்னை குன்றத்தூரில் பதுங்கியிருந்த அவர்களையும், புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பத்தில் இருந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னசாமியையும் கைது செய்த சிபிசிஐடி போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த நில மோசடியில் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: #VAO_OfficerCBCIDpondicherrysalesTemple land
Previous Post

அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி!

Next Post

அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”

Related Posts

GUN இருந்தால்தான் கிராம நிர்வாக சேவை செய்வோம்!.. VAO-க்கள் மனு!
க்ரைம்

GUN இருந்தால்தான் கிராம நிர்வாக சேவை செய்வோம்!.. VAO-க்கள் மனு!

May 3, 2023
மணல் மாஃபியாவால் விஏஓ படுகொலை.. உயிரைக் காக்கத் தவறிய குற்றத்துக்காக பதவி விலகுவாரா நெஞ்சுக்கு நீதியின் மகன்?
க்ரைம்

மணல் மாஃபியாவால் விஏஓ படுகொலை.. உயிரைக் காக்கத் தவறிய குற்றத்துக்காக பதவி விலகுவாரா நெஞ்சுக்கு நீதியின் மகன்?

April 29, 2023
சொகுசு காரில் சொகுசாக கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர்!
இந்தியா

சொகுசு காரில் சொகுசாக கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர்!

February 20, 2023
போத்தீஸின் பெஸ்டிவல் கண்டஸ்ட் !
தமிழ்நாடு

போத்தீஸின் பெஸ்டிவல் கண்டஸ்ட் !

February 13, 2023
ஒன்றரை லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் !
தமிழ்நாடு

ஒன்றரை லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் !

February 13, 2023
பாண்டிச்சேரி சாரயத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!
தமிழ்நாடு

பாண்டிச்சேரி சாரயத்தை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது!

January 30, 2023
Next Post
அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”

அபராதம் என்ற பெயரில் ”பகல் கொள்ளை”

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version