சட்டப்பேரவையில் மீன்வளம், பால்வளத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

சட்டப்பேரவையில் மீன்வளம் உள்ளிட்ட துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில், நேற்று உள்ளாட்சித்துறைக்கான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறைகள் மீதான விவாதம் இன்று நடைபெறுகின்றது. மீன்வளத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து பேசுவார். அதே போன்று, பால் வளத்துறை சம்பந்தமான கேள்விகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், கால்நடைத்துறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும் பதில் அளித்து பேசுவர். மானிய கோரிக்கை விவாதம் முடிவுற்ற பிறகு, அந்தந்த துறைகளுக்கு இந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கப்படும்.

Exit mobile version