படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவிகள் ஆபத்தான பயணம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தட்டார்மடம் வழியாக உடன்குடி செல்லும் அரசு பேருந்துகள் காலை மற்றும் மாலை வேளைகளில் சரியாக இயக்கப்படாததால் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், உயிரை பணயம் வைத்து மாணவர்கள் பயணம் செய்யும் நிலையை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version