ஒடிசாவில் ஃபானி புயலுக்கு 29 பேர் பலி

ஃபானி புயலில், ஒடிசா மாநிலத்தில் 29 பேர் பலியானதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஃபானி புயலின் கோரத் தாண்டவத்தால், ஒடிசாவில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ஃபானி புயலால் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புரி மாவட்டத்தில் மட்டும் 21 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே புயலால், ஒடிசா கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு, தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version