விடியா அரசின் திறனற்ற ஆட்சி குறித்து எடுத்துரைக்க வேண்டும் – மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்!

ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்றும் பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கலந்து கோண்டு தேர்தல் களத்தில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினார். ஆளும் கட்சியாக உள்ள திமுகவினரின் பணம் மற்றும் ஆள்பலத்திற்கு இடையில் அதிமுக முழுவெற்றி பெற பொறுப்பாளர்கள் விழிப்புடன் களப்பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version