மது அருந்தும் கூடாரமாக மாறிய கடலூர் அரசுப்பள்ளி கட்டிடம்! என்னதான் செய்கிறது விடியா திமுக அரசு?

cuddalore panruti school

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளியின் கட்டிடத்தை விடியா அரசு முறையாக பராமரிக்காததால் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையிலும், பள்ளி வளாகம் மது அருந்தும் கூடாரமாகவும் மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியில் உள்ள கட்டிடங்களில் செடி கொடி வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகங்களை விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நிர்வாக திறனற்ற திமுக அரசு கல்வித்துறையின் மெத்தனப் போக்கால் இது போன்ற சம்பவம் நடைபெறுவதாக பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Exit mobile version