News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சென்னையில் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது

Web Team by Web Team
October 7, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, வீடியோ
Reading Time: 1 min read
0
சென்னையில் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கைது
Share on FacebookShare on Twitter

வீட்டின் பூட்டை உடைத்து பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பலை பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை பள்ளிகரணை பரமேஷ்வரன் தெருவை சேர்ந்தவர் முனி உசைன். கடந்த செப்டெம்பர் 24 ஆம் தேதி இவருடைய வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகையை கொள்ளையடித்தனர். இதேபோல் பள்ளிகரணை அம்பாள் நகர் பகுதியில் அம்சவல்லி என்பவர் நடந்து செல்லும்போது அவரிடம் இருந்த 1.5 சவரன் தங்க நகையை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றனர். மேலும் பள்ளிகரணை அடுத்த ஒட்டியம்பாக்கம் அரசன்கழனியில் பபிதா என்பவர் வீட்டை உடைத்து 4 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துள்ளனர். சென்னை பள்ளிகாரணை சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களும், செயின் பறிப்புகளும், இருசக்கர வாகனங்களை திருடுவதும் அதிகரித்துள்ளது.

பள்ளிகாரணை காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வந்த நிலையில் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் பள்ளிகரணை குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம்வின்சன்ட் தலைமையில் தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் 8 அடுக்கு ஏ பிளாக் பகுதியில் பதுங்கியிருந்த சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(எ)சுக்குகாபி, பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியை சேர்ந்த சூர்யாவிக்ரம்(எ)மெக்கானிக் சூர்யா(17), மற்றும் சீனிவாசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் மற்றுமொரு குற்றவாளியான மகபூல் பாட்ஷா(எ)பல்லு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

கைது செய்த மூவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது பல திடுகிடும் தகவல் வெளியானது. கடந்த 8 மாதமாக, பள்ளிகாரணையில் முனிஉசைன் வீடு உள்ளிட்ட பல்வேறு வீடுகளை உடைத்தும், நடந்து செல்பவர்களிடம் செயின் பறிப்பில் இந்த கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது செய்தவர்களிடமிருந்து 40 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, லேப்டாப், ப்ளே ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறியினர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சாதூரியமாக கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு ஆய்வாளர் சாம் வின்சன்ட், உதவி ஆய்வார்கள் இளங்கனி, கண்ணன் உள்ளிட்டவர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Tags: Chennainewsjtheftgang
Previous Post

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

Next Post

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
அரசியல்

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
Next Post
3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version