இந்திய விமானப்படைக்கு பிரபல கிரிக்கெட் வீரர்கள் சல்யூட்….

பாகிஸ்தானில் நுழைந்து இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முகாம்கள் தகர்க்கப்பட்டன. இந்த சம்பவத்தையொட்டி விமான படை வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேர்மையான நமது நடத்தையை பலவீனமாக கருதக்கூடாது என்றும் இந்திய விமானப்படைக்கு சல்யூட் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். நமது வீரர்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர் என்று சேவாக்கும் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு தக்க பதிலடி என்று சுரேஷ் ரெய்னாவும் குறிப்பிட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்காக பெருமிதம் கொள்வதாக ரகானே தெரிவித்துள்ளார்.

Exit mobile version