பெட்ரோல் – டீசல் வாங்க கடன் வசதி

ஈரோட்டில் பெட்ரோல் வாங்க கடன் வசதி செய்து தரப்படும் என்ற அறிவிப்பிற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

வாகனக்கடன், வீட்டுக்கடன், பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் என எத்தனையோ கடன்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாம் கேள்விப்படாத லோன் மட்டுமல்ல… இதற்கெல்லாம் லோன் கொடுக்கக்கூடிய காலம் வரும் என யாரும் நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றிக்கு ஈரோட்டில் லோன் அறிவித்துள்ளனர். ஆம். பெட்ரோல்-டீசலுக்கு கடன் திட்டம் ஒன்றை தனியார் நிதி நிறுவனத்தினர் அறிவிக்க, அது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே வாகனங்களுக்கு கடனுதவி வழங்கி வந்த இந்த தனியார் நிறுவனம், தற்போது பெட்ரோல் டீசல் வாங்கவும் கடனுதவி அளிக்க முன் வந்துள்ளது. இதற்காக ஈரோடு மாமரத்து பாளையத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பெட்ரோல் பங்க்கில் கடனுதவி முகாம் நடைபெற்றது.

10 நிமிடங்களில் 1 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க திட்டம் வைத்துள்ளதாகவும், இந்த கடனுதவி முகாமானது நாடு முழுவதும் செயல்பட உள்ளதகவும் தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version