விவேக் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல : மருத்துவமனை விளக்கம்

விவேக் மாரடைப்புக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை என  மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 

இன்று காலை 11மணியளவில் குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வந்தனர் மயக்க நிலையில் இருந்தார் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது… 100%இரத்த அடைப்பு இருந்தது. தற்போது ஐ.சி.யு வில் இருக்கிறார். 24மணி நேரம் கண்காணிப்பிறகு பிறகு தான் அடுத்தகட்ட சிகிச்சைக்கு செல்லமுடியும். 

இது அவருக்கு முதல் மாரடைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்றும் மருத்துவர் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் கொரோனா தடுப்பூசி குறித்த தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் சமூக வலைதளங்களிலேயே விழிப்புணர்வுப் பதிவுகள் பரவத் தொடங்கியுள்ளன.

Exit mobile version