அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

கோவை அரசு பொதுமருத்துவமனையில் 700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு ஊதியமாக 721 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய நிலையில், அந்த தொகையை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் விடியா திமுக அரசின் கோவை மாநகராட்சி நிர்வாகம், ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல் பணியாளர்களை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த பணியாளர்கள் காலவரையாற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version