நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட காங்.-திமுக பேனர்கள் அகற்றம்

நாகர்கோவிலில் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்காக விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை தேர்தல் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் காங்கிரஸ்-திமுக கூட்டணி பிரச்சார தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்காக விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள், கொடி, தோரணங்களை, தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். 

Exit mobile version