காங்., திமுக வேட்பாளர்கள் மீது தேர்தல் விதிமீறல் புகார்

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் விதிமுறை மீறல் குறித்த இரு புகார்களை அளித்துள்ளார்.

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பிரசாரத்தின் போது அதிமுக வேட்பாளரிடம் ஓட்டுக்கு 5 ஆயிரம் பெற்று கொள்ளுங்கள் என கூறினார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல், திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தங்களது கட்சியின் சுவரொட்டி விளம்பரங்களை ஒட்டி வாக்கு சேகரித்தது தொடர்பாகவும் பாபு முருகவேல் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

Exit mobile version