அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஆணையர் குழு அமைப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நீதிபதி தலைமையில் ஆணையர் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை அவனியாபுரத்தில நடத்தப்படும் ஜல்லிக்கட்டி விழாக் கமிட்டியில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே முடிவெடுப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விழாக் கமிட்டி அமைப்பது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஒற்றுமை ஏற்படாவிட்டால் நீதிமன்றமே விழாக் கமிட்டி அமைக்கும் என அறிவித்திருந்தது.

இதையடுத்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நீதிபதி தலைமையில் ஆணையர் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபிறப்பித்துள்ளது. மேலும், நீதிமன்றம் நியமித்த ஆணையரே ஜல்லிக்கட்டு விழா குழு தலைவரை தேர்வு செய்வார் என்று அறிவித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜல்லிக்கட்டு போட்டிக்குரிய நிபந்தனைகள், பாதுகாப்பு மற்றும் இதர விவரங்கள் குறித்து இன்றுமாலை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version