மெரினா கடற்கரையில் குப்பைகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்

இந்தியன் வங்கி ஒருங்கிணைப்புடன் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தம் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது.

தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி இந்தியன் வங்கி மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் அனிதா அவர்களது தலைமையில் சென்னை மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இதில் 20 சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். குப்பையில்லா மெரினாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய தூய்மை பணிகளில் ஈடுபடுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version