கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது.    இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.   கனமழை  காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142அடியை எட்டியுள்ளது.  பாதுகாப்பு காரணங்களுக்காக அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால்,  அணையின் கரையோர பகுதிகளான உத்தமபாளையம், தேனி, வீரபாண்டி, குன்னூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version