ஸ்டாலின் தன் மீது வைக்கும் அவதூறுகளை மக்கள் நம்பமாட்டார்கள்: முதலமைச்சர்

ஸ்டாலின் தன் மீது வைக்கும் அவதூறுகளை மக்கள் நம்பமாட்டார்கள் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத்தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷை ஆதரித்து, முதலமைச்சர் பழனிசாமி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது விழா மேடையில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தன் மீது ஸ்டாலின் வைக்கும் அவதூறுகளை மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், தான் விவசாய குடும்பத்தில் பிறந்து, 45 ஆண்டுகாலம் கடினமாக உழைத்து முதலமைச்சர் பதவிக்கு வந்திருப்பதாகவும், தெரிவித்தார்.

Exit mobile version