2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கியது ஏன்?: முதலமைச்சர்

ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன்? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version