திமுக பொதுக்கூட்டத்தில் தூங்கி வழிந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கூட்டத்தினர் தூங்கி வழிந்ததால் நிர்வாகிகள் செய்வதறியாமல் கூட்டத்தை விரைவில் முடித்துக் கொண்டனர்.

திருவண்ணாமலை திமுக மக்களவை வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து கீழ்பென்னாத்தூர் அடுத்த மங்கலத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அண்ணாதுரையை ஆதரித்து கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு. பிச்சாண்டி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் தூங்கி வழிந்தனர். மேலும் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இதையடுத்து செய்வதறியாமல் தவித்த திமுக நிர்வாகிகள், கூட்டத்தை விரைவாக முடித்துக் கொண்டனர்.

Exit mobile version