இணையத்தில் வைரலான கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சிறுவன் எழுதிய கடிதம்

அமெரிக்காவின் டெக்ஸாஸில், 7 வயது சிறுவன் ஒருவன், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தைகளின் கடிதங்கள், ஒரு சில நேரம் நம்மை நெகிழ வைத்து விடும். அதுபோன்ற ஒரு கடிதம்தான், அமெரிக்க சிறுவன் ப்ளேக் ((blake )) எழுதியது. அமெரிக்காவின் டெக்ஸாஸில், உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் பாதுகாப்பு முகாம் ஒன்று உள்ளது. அந்த முகாமில் இருப்பவன்தான் இந்த பிளேக்.

கிறிஸ்துமஸ் நெருங்கிவரும் வேளையில், சிறுவன் பிளேக், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் ஒன்று எழுதியுள்ளான். அந்த கடிதத்தில், அன்புள்ள சாண்டா, நாங்கள் எங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் இருந்தது. என்னுடைய அப்பா சரியில்லாதவர். நாங்களே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. அப்பா, அவருக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டார். அதே சமயம், `இது நாம் வெளியேற வேண்டிய நேரம்; பயப்படத் தேவையில்லாத பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்’ எனக்கு பதற்றமாக இருக்கிறது” என அம்மா தன்னிடம் கூறியதாக எழுதியிருந்தது.

மேலும், நான் மற்ற குழந்தைகளிடம் பேச விரும்பவில்லை. நீங்கள் இந்த கிறிஸ்துமஸுக்கு வருவீர்களா? எங்களிடம் எதுவுமே இல்லை” காம்பஸ், டிக்-ஷனரி, வாட்ச் ஆகியவை வேண்டுமென்றும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு பிளேக் கோரிக்கை விடுத்திருந்தான். எனக்கு மிக மிக நல்ல அப்பாவும் வேண்டும். உங்களால் தர முடியுமா? – அன்புடன் பிளேக்” என்று எழுதியுள்ளான்.

Safe Haven of Tarrant County என்ற அந்த பாதுகாப்பு முகாமைச் சேர்ந்தவர்கள், கடந்த டிசம்பர் 18-ம் தேதி தங்களது முகநூல் பக்கத்தில், “எங்களது முகாமிலிருக்கும் 7 வயது சிறுவன் பிளேக், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய கடிதம் என்று குறிப்பிட்டு, அதை பதிவேற்றம் செய்தனர்.

இதைப் படித்து நெகிழ்ந்த இணையவாசிகள், சிறுவன் பிளேக் மற்றும் முகாமில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் உதவி செய்ய முன்வந்தனர். சொன்னதுபோல், அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளையும் வழங்கியுள்ளனர். முகநூலில், பிளேக்குக்கும், பாதுகாப்பு முகாமில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் நெட்டிசன்கள் வழங்கிய பரிசுப் பொருட்களின் புகைப்படத்தை“You all are INCREDIBLE!!” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளனர்.

எப்படியோ SANTA வுக்கு பிளேக் எழுதிய கடிதத்தின் மூலமாக, அவனுக்கு மட்டுமல்லாமல், மற்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கும் இந்தாண்டு கிறிஸ்மஸ் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்…

Exit mobile version