நெடுஞ்சாலை துறை மானியக்கோரிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை

நெடுஞ்சாலை துறை மானியக்கோரிக்கை தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து நிதி பெறுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 28ஆம் தேதி கூடுகிறது. மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்யும் பணிகளில் அமைச்சர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் தன் வசம் உள்ள நெடுஞ்சாலை துறை தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் இருந்து நெடுஞ்சாலை துறையின் பொறியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் தமிழகத்தில் நடைப்பெற்று வரும் பணிகளின் நிலை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வரும் 26ஆம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Exit mobile version