தமிழ்நாடு புத்தாக்கக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார்

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்குள் எளிமையான வழிமுறைகள் மூலம் 5 ஆயிரம் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தாக்க கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version