ஸ்டிக்கர் ஒட்டுவதை வாடிக்கையாக்கிய சென்னை மாநகராட்சி நிர்வாகம் !

சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 32 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிற மே மாதம் துபாய் நாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் முதற்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் துபாய் சென்று வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தனியார் ரோட்டரி கிளப் செய்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சிதான் அனைத்தையும் செய்தது போல் மாநகர மேயர், துணை மேயர் மற்றும் ஆணையர் உட்பட அனைவரும் சொல்லி வருகிறார்கள்.

Exit mobile version