அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை விண்ணப்பத்திற்க்கு கட்டணமா ? – திமுக தலையீடு

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பெற 100 ரூபாய் கட்டணம் கேட்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்திற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, மாணவர் சேர்க்கையில் திமுக பிரமுகர்கள் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பியபோது பள்ளி நிர்வாகம் முறையாக பதிலளிக்காமல் மௌனம் காத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Exit mobile version