சென்னையில் 42-வது புத்தக கண்காட்சி ஜனவரி 4-ல் தொடக்கம்

 

சென்னையில் நடைபெறும் 42-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரன் கூறியிருப்பதாவது.

சென்னையில் 42-வது புத்தக கண்காட்சி ஜனவரி 4-ம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தக கண்காட்சியை தொடக்கி வைக்கிறார்.

ஆசியாவிலேயே பெரிய புத்தக கண்காட்சி என்பதால், கூடுதலாக 100 அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதில், 15 லட்சம் தலைப்புகள் அடங்கிய புத்தகங்கள் இடம்பெறுகின்றன. சுமார் ஒன்றரை கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த புத்தக கண்காட்சி 17 நாட்கள் நடக்க இருக்கிறது.

கடந்த ஆண்டு மட்டும் 10 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது.

மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவாக புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version