சிவகங்கையில் ஆடிப் பூரத்தையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள காளீஸ்வரன் கோயிலில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

காளையார் கோவிலில் அமைந்துள்ள காளீஸ்வரன் கோயிலில் மூன்று சிவனும், ஒரு அம்மனும் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு ஆடிப் பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சொர்ணவல்லி தாயார் எழுந்தருளினார்.

தேரை ஏராளமான பத்தர்கள் ஓம் சக்தி, ஓம் சக்தி என்ற முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். தேர் நிலையை அடைந்ததும், பக்தர்களுக்கு வாழை பழங்கள் சூறை வீசப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

Exit mobile version